லெம்பலக்குடியில் மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

லெம்பலக்குடியில் மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

லெம்பலக்குடியில் மக்கள் தொடர்பு முகாமில் 1.53 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்திலுள்ள லெம்பலக்குடியில் வருவாய்த் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 257 பயனாளிகளுக்கு ரூ. 1.53 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி வழங்கினார்.

இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமை வகித்தார். பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அரசு நலத்திட்டங்கள் தொடர்பான கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி, வருவாய்க் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) வெ.ம. ரவிச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ஜீவா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags

Next Story