திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உதவிகள் வழங்கல்

திமுக இளைஞரணி சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரம் நகரத்தில் மார்ச் 1 கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ஆகியோர் ஆலோசனை படி, திமுக இளைஞர் அணி சார்பில் பிறந்தநாள் விழா அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ராசிபுரம் காமாட்சி அம்மன் ஆலயம் அருகே உள்ள ராசிபுரம் நகராட்சி பள்ளியில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி குழந்தைகள் உடன் நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாடினர். நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.கார்த்திக் ஏற்பாட்டில் ராசிபுரம் நகர கழகச் செயலாளர் என்.ஆர்.சங்கர் தலைமை தாங்கினார்.

ராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு, குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு வாட்டர் கேன், டிபன் பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கியும் சிறப்பித்தனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புகைப்படம் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ஆசைத்தம்பி, கந்தசாமி, செல்வம், விநாயகமூர்த்தி நட்ராஜ், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ஆனந்த், இளைஞர் அணியினர் கிஷோர் குமார், நவக்குமார், ராம்குமார், சிபிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story