அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
 நலத்திட்ட உதவிகள் வழங்கல் 
ஆலங்குளம் அருகே அரிமா சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது .
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தில் ஆளுநர் வருகை தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறையிலும் சிறந்தவர்களுக்கு விருதுகள் மற்றும் நலிவுற்றவர்களுக்கு தையல் இயந்திரம், அங்கன்வாடிக்கு பீரோ, மேஜை, சேர், மின்விசிறி, கல்வியாளர்கள், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகி ஆகியோருக்கு உதவித்தொகை மற்றும் மலர் வெளியிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story