கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பேராவூரணியில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் 101 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, பேராவூரணி அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அமைத்தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் மு.கி.முத்துமாணிக்கம், க.அன்பழகன், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மாவட்ட விவசாய அணி குழ.செ.அருள்நம்பி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுவாதி காமராஜ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மேலும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் திமுக தலைவர் கருணாநிதி உருவப்படத்திற்கு, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான கா.அண்ணாதுரை, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் வி.சௌந்தரராஜன், நெசவாளர் அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் 300 பேருக்கு சிக்கன் பிரியாணி, சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதில், பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story