திருப்பூர் : மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் நலதிட்ட உதவிகள் வழங்கல்

திருப்பூர் : மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் நலதிட்ட உதவிகள் வழங்கல்

நலதிட்ட உதவிகள்

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களுடன் முதல்வர் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை தொடர்ந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஸ்ரீ மகாராஜா மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி, வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், (தாராபுரம்) ஜஸ்வந்த் கண்ணன், (உடுமலைப்பேட்டை),திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story