மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 

திருவாரூரில் மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக மக்களுடன் முதல்வர் திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூபாய் 69 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான காதுக்குப் பின் அணியும் காதொளி கருவியும், ஒரு பயனாளிகளுக்கு ரூபாய் 9050 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிளும், இரண்டு பயனாளிகளுக்கு ரூபாய் 15 ஆயிரத்து 800 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலி என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story