விருதுநகரில் பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கல்

விருதுநகரில் பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கல்
நலத்திட்ட உதவிகள் வழங்கல் 
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில்,மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில் அரசு விழாவில்"மக்களுடன் முதல்வர்" திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதனை தொடர்ந்து, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில்,மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 1000 பயனாளிகளுக்கு ரூ 9.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

விழாவில் அருப்புக்கோட்டையை சேர்ந்த வளர்மதி என்ற பெண் காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கையில்,மக்களுடன் முதல்வர் திட்டத்தின் வாயிலாக மாவட்ட தொழில் மையத்தில் ரூ. 2.5 லட்சம் மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன் பெற்று சானிட்டரி நாப்கின் தொழில் தொடங்கி தொழில் முனைவோராக மாறியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,

இத்திட்டத்தின் மூலம் 30 நாட்களில் தான் தொழில் தொடங்கியுள்ளதால் முதலமைச்சருக்கு தனது நன்றியை தெரிவிப்பதாக பேசினார்.

Tags

Next Story