மாணவ, மாணவிகளுக்கு 426 விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

திருப்பூர் அய்யன்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 426 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினார்.
திருப்பூர் அய்யன்காளிபாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ,மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பள்ளியை சேர்ந்த 426 மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளியில் நடந்தது. இதற்கு தலைமை தாங்கிய செல்வராஜ் எம்.எல்.ஏ. மாணவ,மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் குப்புசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் முருகேசன், பள்ளி வளர்ச்சிக்குழு பொருளாளர் பாலகிருஷ்ணன், பகுதி செயலாளர் ராமதாஸ், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பிரேமலதா கோட்டாபாலு, அனுசியா சண்முகம், சாந்தி பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story