குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கல்!

குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கல்!

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ஆத்தூர் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் கள்வழங்கப்பட்டன.

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ஆத்தூர் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் கள்வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தெற்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வடக்கு ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செல்வராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலுக்கு ரூ.1.5லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் நிறுவப்பட்டது. இக்கருவிகளை நிறுவனத்தின் துணைத் தலைவர் (உற்பத்தி) சுரேஷ் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். டிசிடபிள்யூ நிறுவன ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story