மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட ஆட்சியரங்கில் நடைபெற்ற குறைத்தீர் கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 75 ஆயிரத்து 300 மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன. 8 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலிகள், 8 பேருக்கும் மூன்று சக்கர வாகனங்கள், ஒருவருக்கு கை தாங்கி ஆகியவற்றை ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார். மக்கள் குறை கேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 313 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அது குறித்து விவரங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் இரா. சந்தானலட்சுமி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல வளர்ச்சி அமீர் பாஷா, மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags

Next Story