பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கல்

ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்கு தேர்வு உபகரணங்கள் மற்றும் வாழ்த்துரை வழங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராதிகா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் ரீட்டா, சுகுணாம்பிகை, விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுத் தேர்வு எழுதும் பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு தேர்வு உபகரணங்களை ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜேஆர்சி கணேசன் வழங்கினார். ஊத்தங்கரை காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் சுனிதா, அருள் தேவி ஆகியோர் மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். வருகின்ற பொதுத்தேர்வில் முதல் ஐந்து மதிப்பெண் எடுக்கும் மாணவிகளுக்கு புத்தாடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குவதாக ஆசிரியர் கணேசன் உறுதி அளித்தார்.

Tags

Next Story