வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கல்

வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கல்

நாசரேத் வாழையடியில் சேவா பாரதி அமைப்பு சார்பில் 300 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நாசரேத் வாழையடியில் சேவா பாரதி அமைப்பு சார்பில் 300 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் உள்ள வாழையடி குருசாமி கோவில் கலையரங்கத்தில் உடையார்குளம், வெள்ளமடம், குறிப்பன்குளம், வாகைகுளம், கடயனோடை, ஞானராஜ்நகர், பிடாநேரி, டி.கே.சி.நகர் கிராம மக்கள் கடந்த மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கபட்ட 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு சேவாபாரதி அமைப்பு சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உமா கணேஷ்ராஜ், லட்சுமி ரங்கன் ஆகியோர்குத்து விளக்கு ஏற்றினர்.

தூத்துக்குடி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். மாசனமுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார். சேவாபாரதி மாவட்ட தலைவர் மந்திரம், ஆர்.எஸ்.எஸ்.மாவட்ட இணை அமைப்பாளர் ஶ்ரீதர், இந்து முன்னணி மாநில துனைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், பாஜக மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் ஆகியோர் கல ந்துகொண்டுசிறப்பித்தனர். இந்து முன்னணி ஆழ்வார் திருநகரி ஒன்றிய பொறுப் பாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

Tags

Next Story