மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கல்

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கல்
மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் 314 இலவச சைக்கிள் வழங்கினார்
தென்காசி மாவட்டம்,வெங்கடேஸ்வரபுரம் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரம் கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் ஆணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் 314 இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் குகன் தலைமை நடைபெற்றது.

ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story