இலவச சைக்கிள்கள் வழங்கல்

இலவச சைக்கிள்கள் வழங்கல்

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 422 பேருக்கு, எம்.எல்.ஏ., ஜோதி இலவச சைக்கிள்களை வழங்கினார். 

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 422 பேருக்கு, எம்.எல்.ஏ., ஜோதி இலவச சைக்கிள்களை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வரும் 422 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக் முன்னிலை வகித்தார்.செய்யாறு எம்எல்ஏ ஓ. ஜோதி கலந்து கொண்டு 422 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உடன் நகரமன்ற தலைவர் மோகனவேல்,நகர மன்ற முன்னாள் தலைவர் சம்பத் , ஓன்றிய செயலாளர்கள் தினகரன், ஞானவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story