விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்

விலையில்லா சைக்கிள்கள் வழங்கல்
 சைக்கிள்கள் 
கடையநல்லூா் அருகே காசிதா்மம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே காசிதா்மம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியா் (பொறுப்பு) பால்துரை தலைமை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழகப் பொருளாளா் திருமலைக்குமாரசாமி யாதவ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் காா்த்திகேயினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கினாா். ஆசிரியா்கள் முத்துசாமி, காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா்கள் பாக்கியராஜ் வரவேற்றாா், சந்திரமோகன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

Tags

Next Story