விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

சிறுவாச்சூர், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வழங்கினார்.

தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டியினை வழங்கினார், இதனை தொடர்ந்து கவுள் பாளையத்தில் உள்ள அரசு மேல்நில ப்பள்ளி, மாணவ மாணவிகளுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டியினை வழங்கினார்,

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளிடம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பேசும்போது, அரசின் சார்பில்பல்வேறு நலத்திட்டங்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன இதில் குறிப்பாக மாணவிகள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு திட்டங்கள் தமிழக முதல்வர் செய்தி வருகிறார் இதனை மாணவ மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி, உயர் கல்வி பயின்று நல்ல நிலைக்கு வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியன் போது பெரம்பலூர் ஒன்றிய திமுக செயலாளர் ராஜ்குமார், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, சிறுவாச்சூர் கிளைக் திமுக நிர்வாகிகள் , ஆசிரியர மாணவ,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story