பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

விலையில்லா சைக்கிள்

திருச்சி சேவா சங்கம் பள்ளி மாணவிகளுக்கு மாமன்ற உறுப்பினர் ஜெ.கலைச்செல்வி விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி சேவா சங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியை நாகம்மை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகராட்சி 53வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ஜெ. கலைச்செல்வி கலந்து கொண்டு 147 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சேவா சங்கம் தலைவி சகுந்தலா சீனிவாசன், துணை தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், ஆசிரியைகள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story