எடப்பாடியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

எடப்பாடியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல் 

அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி எடப்பாடி நகர மன்ற தலைவர் பாஷா வழங்கினார்.

எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 311மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் அரசுஉதவிபெரும் பள்ளிகளில் +1படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லாத மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் +1பயிலும் மாணவர்களுக்கு எடப்பாடி நகர்மன்ற தலைவரும் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான D.S.M.பாஷா மிதிவண்டிகளை வழங்கினார். 2023-2024ம்ஆண்டு +1பயிலும் 311மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியர்கள் செந்தில் குமார், ராஜமாணிக்கம், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story