அரசின் வெள்ளப்பெருக்கு நிவாரண நிதி வழங்கல்

அரசின் வெள்ளப்பெருக்கு நிவாரண நிதி வழங்கல்
கீழ்குளத்தில் வெள்ள நிவாரணம் வழங்கல் .
குமரி மாவட்டம் கீழ்குளம் வலியவிளை நியாய விலை கடையில் மழை வெள்ள பாதிப்பு உரிமை தொகை வழங்கும் நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
குமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்குளம் வலியவிளை நியாய விலை கடையில் தமிழ்நாடு அரசு வழங்கிய மழை வெள்ள பாதிப்பு உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசின் ரூபாய் ஆயிரம் நிவாரண தொகையினை பேரூராட்சித் தலைவர் சரளா கோபால் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ஜான், லாசர், அல்போன்சா, பேரூராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், தீபா, கீழ்குளம் பேரூர் திமுக செயலாளர் எஸ் எம் கான், கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி மு க செயலாளர் கோபால், மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி முன்னாள் அமைப்பாளர் ஜெபா ஜாண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story