சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கல்

சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி  வழங்கல்
 தென்காசி நகராட்சியில் தேசிய நகா்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.
தென்காசி நகராட்சியில் தேசிய நகா்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

தென்காசி நகராட்சி- தேசிய நகா்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் நகா்புற சாலையோர வியாபாரிகள் 10 பேருக்கு தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

இதையொட்டி, நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் தலைமை வகித்து வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளை வழங்கினாா். இதில், நகராட்சி ஆணையாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். நகராட்சி உதவிச் செயற்பொறியாளா் ஹசீனா, நகரமைப்பு ஆய்வாளா் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளா் நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story