சாலையோர வியாபாரிகளுக்கு வாகனங்கள் வழங்கல்

சாலையோர வியாபாரிகளுக்கு வாகனங்கள் வழங்கல்

வாகனங்கள் வழங்கல் 

ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் 40 வண்டிகளை மாநகர மேயர் சத்யா வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வாகனங்களை வழங்க 4வது மாநில கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது அதன்படி ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் காய்கறி பழங்கள் விற்க 22 வண்டிகள், உணவு விற்க 8 வண்டிகள், பூக்கள் விற்பனை செய்ய 10 வண்டிகள் என 31.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 40 வண்டிகளை வியாபாரிகளுக்கு ஒசூர் மாநகர மேயர் சத்யா வழங்கி சரியான முறையில், வாழ்வாதாரம் மேம்படுத்திக்கொள்ள வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜ், மாரக்கா சென்னீர், இந்திராணி, மல்லிகா தேவி மற்றும் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் (திட்டம் ) உடன் இருந்தனர்

Tags

Next Story