குறைதீர் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

குறைதீர் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 நலத்திட்ட உதவி வழங்கல் 

புதுக்கோட்டையில் நடந்த குறைதீர் முகாமில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ சார்பில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்களுக்கு, இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.25,000/- க்கான காசோலையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா, மாவட்ட மேலாளர் (தாட்கோ) எல்.அனிட் லிமலின் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story