மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் ஆட்சியர் வழங்கினர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது . இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.

பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் . மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 9 லட்சத்து 40,000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும் ,

மூன்று மாற்று திறனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தில் 8 கிராம் தங்க நாணயங்கள் மூன்று நபர்களுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள தங்க நாணயங்கள் ஆகியவைகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.

Tags

Next Story