தூய்மை பணியாளருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

தூய்மை பணியாளருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

தூய்மை பணியாளருக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

சேலம் மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்ப்பில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன
சங்கராபுரம் பேரூராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. ரோட்டரி சார்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ரோட்டரி தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் துணை ஆளுனர்கள் முத்துக்கருப்பன், ஜனார்தனன், துணை ஆளுனர் வெங்கடேசன், தேர்வு தலைவர் அசோக்குமார், பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி தாகப்பிள்ளை முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் வரவேற்றார். பேரூராட்சி துாய்மைப் பணியாளர்கள் 60 பேருக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போர்வைகளை முன்னாள் ரோட்டரி தலைவர் ரகுநந்தன் வழங்கினார். விழாவில் முன்னாள் ரோட்டரி தலைவர்கள் மூர்த்தி, ஆறுமுகம், செந்தில், ரவி, பிரகாஷ் பங்கேற்றனர்.

Tags

Next Story