அரசுப்பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அரசுப்பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கும்பகோணத்தில் அறக்கட்டளை சார்பாக அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  

கும்பகோணத்தில் அறக்கட்டளை சார்பாக அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கும்பகோணத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் அறக்கட்டளை சார்பாக அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

கும்பகோணம் அருகே கீழ கொற்கை அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 163 மதிப்பீட்டில் மேஜை, போர்டு, நாற்காலிகள், பீரோ மற்றும் உயர்ரக நாற்காலிகள் ஆகிய உபகரணங்களை கும்பகோணம் கிளை மேலாளர் ரஞ்சித் மற்றும் துணை மேலாளர் ஜெயராமன் ஆகியோர் வழங்கினர்.

இதனை பள்ளியின் தலைமையாசிரியை ராஜேஸ்வரி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அழகு கலை நிபுணர் அனுசியா பங்கேற்று வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் திருமங்கை, சுதா, அமுதா, ஹேமாதேவி, பரிமளா, லதா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் அஷ்ரஃப் அலி செய்திருந்தார். .

Tags

Next Story