மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அத்திமனம் அருகே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இன்று (08.02.2024) செங்கல்பட்டு மாவட்டம், அத்திமனம் அருகே உள்ள கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியில் மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்,திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் இரா.மணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ். திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.டி.அரசு. அச்சரப்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவர் கண்ணன். காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் உதயா கருணாகரன், புனித தோமையார் மலை ஒன்றியக்குழுத் தலைவர் சங்கீதா பாரதிராஜன், மறைமலை நகர் நகர்மன்றத் தலைவர் ஜெ.சண்முகம், வையாவூர் ஊராட்சி மன்றத் தலைவர் காமராஜ், வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story