செங்கோட்டையில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

செங்கோட்டையில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
செங்கோட்டையில் நலத் திட்ட உதவிகள் வழங்கல் நடைபெற்றது
திமுக தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசியில் திமுகவினர் நலதிட்ட உதவிகள் வழங்கினர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா அலவலகம் முன்பு வைத்து தென்காசி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் வழிகாட்டு தலின்படி நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் முக. ஸ்டாலின் 71வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் தலைைம தாங்கினார்.

நகர அவைத் தலைவர் காளி நகர துணை செயலாளர்கள் ஜோதிமணி, ராஜா மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வழக்கறிஞர் ஆபத்துக்காத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் மாரியப்பன் வரவேற்று பேசினார். விழாவில் பட்டாசு வெடித்து வாழ்த்து கோஷங்கள் முழங்கி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப் பட்டது. அதனைதொடர்ந்து அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு பிரட், பிஸ்கட் ஆப்பிள் ஆரஞ்சு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச்பீர் முகம்மது, சுப்பிரமணியன் நகர்மன்ற உறுப்பினர் மேரி அந்தோணிராஜ், பேச்சாளர் குற்றாலிங்கம், மாரியப்பன், சதாபாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story