மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன் பெறுகின்ற வகையில் தென்காசியில் உள்ள ஐ,சி,இ அரசு பள்ளி கூட்டரங்கில் வைத்து மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நேற்று மாலையில் 2ம் தேதி நடைபெற்றது.

இந்த முகாமில் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story