கலைத்திருவிழாவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு விழா

கலைத்திருவிழாவில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு பாராட்டு விழா

கலைதிருவிழாவில் மாணவன் முதலிடம் 

மொழித்திறன் பிரிவில் கடம்பூர் பள்ளி மாணவன் முதலிடம் பிடித்தார்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 310 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆத்தூர் அருகே கூலமேடு பகுதியைச் சேர்ந்த ராகுல்காந்தியின் மகன் பிரவீன் காந்தி (14), ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கலை திருவிழாவில் மாநில அளவில் நடைபெற்ற மொழித்திறன் தமிழில் முதலிடம் பெற்றுள்ளார்.

மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவன் பிரவீன்காந்திக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம், பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் ராஜசேகர் பெற்றோர் ஆசிரியர் கழகப்பொருளாளர் பெருமாள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவன் பிரவீன்காந்திக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர் நினைவு பரிசை வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ₹3 ஆயிரத்தை வழங்கினர்.

Tags

Next Story