திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுக்கணக்கு குழு ஆய்வு - ஈஸ்வரன் எம்.எல்.ஏ பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுக்கணக்கு குழு ஆய்வு - ஈஸ்வரன் எம்.எல்.ஏ பங்கேற்பு

பொது கணக்கு குழு ஆய்வு 

திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுக்கணக்கு குழு ஆய்லில் ஈஸ்வரன் எம்.எல்.ஏ கலந்துகொண்டார்
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பொது கணக்கு குழு ஆய்வு பயணம் மேற்கொண்டது. இக்குழு திண்டுக்கல் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து குழு கூடி புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மருத்துவ மையத்தை ஆய்வு செய்தனர். நாகல் நகர் ESI மருத்துவமனை, நத்தம் சாலையில் அமைந்துள்ள TNCSC Godown ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொது கணக்கு குழு சார்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பொது கணக்குக் குழுத் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, உறுப்பினர்கள் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் , திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் S.S.பாலாஜி , சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் S.சேகர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் , திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொது கணக்குக் குழு அலுவலர்கள், துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் ஆய்வுப் பயணத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story