தரமற்ற சிமெண்ட் சாலையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்

தரமற்ற சிமெண்ட் சாலையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்

தரமற்ற சிமெண்ட் சாலையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்

திண்டுக்கல் பகுதியில் தர மற்ற சிமெண்ட் சாலையால் குடியிருப்பு பொதுமக்கள் விரக்தியடைந்துள்ளனர் .
திண்டுக்கல் பழனி சாலை அருகே உள்ள பள்ளப்பட்டி பஞ்சாயத்து கொட்டபட்டி கல்பனா சாவ்லா நகர் தெரு பகுதியில் தரமற்ற சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஊராட்சி ஒன்றியம் நிர்வாகத்தினர் மீது குற்றச்சாட்டுகின்றனர்.பணி ஒப்பந்ததாரர் முறையான சாலைக்கான பணியை செம்மை படுத்தாமல் சாலை அமைக்கும் பணியின் போது குடிநீர் இணைப்பு குழாய்களை கனரக வாகனங்களை கொண்டு சேதப்படுத்தியும்,அதனை குடியிருப்பு வாசிகள் சரிசெய்ய வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை .விறு விறுவென சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் மண், ஜல்லிக்கற்கள் போன்ற வற்றை சரியான முறையில் செம்மை படுத்தாமல் முறையான அளவு இன்றி சாலை அமைத்ததால் மேடு பள்ளங்களாக காட்சி அளிக்கிறது.

Tags

Next Story