தெரு நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள்

தெரு நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள்

தெருநாய்கள் தொந்தரவு

தெரு நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சி திருவெறும்பூர் 41வது வார்டுக்கு உட்பட்டது மலைக்கோவில் தெற்கு இந்திரா நகர் . இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகமாகி விட்டது என்றும் பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் இந்திராநகர் மக்களை தெருவில் நடக்கும் பொழுது பயமுறுத்தும் வகையில் கூட்டம் கூட்டமாகத் திரிவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தங்களது உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது எனவும் வேதனை தெவிக்கின்றனர்.

எனவே கட்டுப்பாடு இன்றி தெருவில் தெரியும் நாய்களை சென்னையில் நடைபெற்ற துயர் சம்பவம் போல் நிகழாமல் தடுக்க திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக தெருவில் திரியும் நாய்களை கட்டுப்படுத்த கோரி இந்திரா நகர் பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story