குற்ற சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர் - பொதுமக்கள் பாராட்டு

குற்ற சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர் - பொதுமக்கள் பாராட்டு

எஸ்ஐ கண்ணன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்த படம்

ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் சிறப்பு எஸ்ஐ கண்ணன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். குறிப்பாக பெண்கள், வயதான பெண்கள் தங்க நகைகளை அணிந்து தனியாக செல்ல வேண்டாம். பூட்டிய வீடுகளில் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்லுமாறு தெரிவித்தார். இதனை நகர் முழுவதும் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். எஸ்ஐ கண்ணனின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story