இருசக்கர வாகனங்கள் பொது ஏலம்

திருவண்ணாமலையில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள் ரூ. 28 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் உத்தரவின்படி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினரால் மாவட்டம் முழுவதும் பல்வேறு வகையான மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள். ஆட்டோக்கள் என மொத்தம் 100 வாகனங்கள் பொது ஏலத்திற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் 87 வாகனங்கள் ரூ.28,00,000/- மதிப்பில் ஏலம் விடப்பட்டு பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

Tags

Next Story