காலி குடங்களுடன் பி. டி. ஒ. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

காலி குடங்களுடன் பி. டி. ஒ. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

முற்றுகை போராட்டம் 

சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு ஜிங்களுர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அடுத்துள்ள ஜிங்களுர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை என்பதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வேப்பனஹள்ளி பி. டி. ஒ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது

Tags

Next Story