அம்மாபட்டி கிராமத்தில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

அம்மாபட்டி கிராமத்தில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் 

அம்மாபட்டி கிராமத்தில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மொட்டனூத்து ஊராட்சிக்குட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இக்கிராமத்தில் குடிநீரே வழங்கவில்லை என்றும்,

கழிவுநீர் கால்வாய் வசதி, பேருந்து வசதி,தெருவிளக்கு வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என்றும் குற்றம் சாட்டியும் இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் முதல் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் அம்மாபட்டி சித்தார்பட்டி சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜதானி காவல்துறையினர் மற்றும் மொட்டனூத்து ஊராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை யையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்

Tags

Next Story