கழிவு நீர் கால்வாய்களை தூர்வார பொது மக்கள் கோரிக்கை

கழிவு நீர் கால்வாய்களை தூர்வார பொது  மக்கள் கோரிக்கை

குப்பைகளை அகற்ற கோரிக்கை 

காங்கேயம் நகராட்சி பகுதிகளிலுள்ள கழிவு நீர் கால்வாய்களில் குப்பைகள் அதிக அளவு காணப்படுவதால் தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காங்கேயத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் கொட்டப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் ஒன்றாக அடித்து வரப்பட்டு பெரிய கால்வாய் குழியான காங்கேயம் ரவுண்டானா பகுதியில் சுமார் 10 அடி ஆழம் உள்ள குழியில் குவிகிறது.

இதனால் அப்பகுதியில் மிக மோசமான துர்நாற்றங்கள் வீசி வருகிறது. இங்கு சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் சுவாசிக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த 10 அடி கழிவுநீர் குழியில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் மற்றும் குப்பைகள் என அனைத்தும் தேங்கி சுற்றுச்சூழலை பாதித்து வருகிறது‌.

எனவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காங்கேயம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story