கழிவுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கழிவுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
கடையநல்லூரில் கழிவுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கழிவுகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவு, கோழி கழிவுகள் என பல்வேறு கழிவுகளை அங்கிருந்து லாரிகள் மூலம் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் கடையநல்லூர் அருகே உள்ள புளியங்குடி மெயின் ரோட்டில் கேரளாவில் இருந்து கண்டெய்னர் லாரியில் மூலம் கொண்டு வரப்பட்ட கழிவு பொருட்களை இறங்குவதால் அப்பகுதியில் துர்நாற்றம் அடித்து வருகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story