பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை

பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள்  கோரிக்கை

புதிய பேருந்து நிலையம் 

நடுவட்டம் பேரூராட்சியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. நாள்தோறும் மைசூர் கேரளா பேருந்துகளும் இங்கு நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும். ஏற்கனவே பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கட்டப்பட்டு தற்ப்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story