விபத்தை ஏற்படுத்தும் பள்ளத்தை மூட பொதுமக்கள் கோரிக்கை

குறுகலான சாலையில் குழாய் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டம்பள்ளிபாளையம் பழைய போலீஸ் ஸ்டேஷன் ரோடு, நெல்லை உணவகம் அருகே உள்ள சாலையில், நீண்ட நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகளுக்காக நகராட்சி சார்பில் தோண்டப்பட்ட, குழி மூடப்படாமல் உள்ளதால், தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. காலை மாலை நேரத்தில் அதிக அளவு வாகனங்கள்,பள்ளி மாணவ மாணவியர் சென்று வருவதால் பெரும் விபத்து ஏற்படும் முன் இந்த குழியை மூட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags

Next Story