கால்வாய்பாலத்தில் தடுப்புச் சுவா் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கால்வாய்பாலத்தில் தடுப்புச் சுவா் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தடுப்புச் சுவா் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க சமூக பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் சுரண்டை பெரியகுளம் கால்வாய் பாலத்தில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என இந்து முன்னணி சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுரண்டை நகர இந்து முன்னணி நிா்வாகி வேலுச்சாமி, மாவட்ட நிா்வாகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: சுரண்டையில் இருந்து வரகுணராமபுரம், சுந்தரபாண்டியபுரம் வழியாக தென்காசிக்கு தினமும் 3 நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சுரண்டை - சுந்தரபாண்டியபுரம் சாலையில் பெரியகுளத்திற்கான நீா்வரத்து கால்வாய் பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவா் இல்லை. ஆபத்தான வளைவு கொண்ட இந்தப் பகுதியில் தடுப்பு சுவா் இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கும் நிலை உள்ளது. எனவே, இந்தக் கால்வாய் பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவா் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாா்.

Tags

Next Story