பழுதடைந்த மின்கம்பத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

பழுதடைந்த மின்கம்பத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

அறந்தாங்கியில் பழுதடைந்த மின்கம்பத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அறந்தாங்கியில் பழுதடைந்த மின்கம்பத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவுடையார் அருகே கள்ளனேந்தல் கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள மின்கம்பங்களில் சுமார் 4க்கும் மேற்பட்ட மின்கம்பங்களின் சிமெண்ட் பூச்சுக்கள் உதிர்ந்து மின்கம்பம் ஒடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. தற்போது அங்கு திருவிழா நடைபெற்று வருவதால் மின்கம்பம் ஒடிந்து விழுந்தால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.எனவே உடனடியாக மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுக்கொள்.

Tags

Next Story