நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

குவித்துள்ள குப்பை 

மாயகுளம் ஊராட்சியில் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஊராட்சி பாரதி நகர் பகுதியில் நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. இது பற்றி பலமுறை ஊராட்சி மன்றத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்சமயம் லேசான மழை பெய்ததால் அங்கு கொசுக்கள் புழுக்கள் அதிகளவில்உற்பத்தியாகின்றன. இப்பகுதியில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.மேலும் இப்பகுதியில் பல்வேறு நபர்களுக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவி வருகின்றன.இதனால் இந்த குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story