குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர் அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்போரூர் அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சி, நான்காவது வார்டு, பெரிய பாளையத்தம்மன் கோவில் தெரு சாலை, கடந்த 10 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. மழையில் சேறு சகதியிலும், வெயில் நேரத்தில் பள்ளம், மேட்டிலும் அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, இச்சாலை பணிக்காக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியிலிருந்து, 365 மீட்டர் நீளம், 3.5 மீட்டர் அகலத்தில், 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மார்ச் 6ம் தேதி சாலை அமைக்க பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இன்னும் புதிய சிமென்ட் சாலை பணிகள் துவங்கப்படவில்லை.

குண்டும் குழியுமான சாலையிலேயே, அப்பகுதிவாசிகள் தினமும் பயணித்து வருகின்றனர். எனவே, விரைவில் இச்சாலைப் பணியை முடிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தண்டலம் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story