பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவூர் பேரூராட்சி பகுதியில் பழுதடைந்த சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் தேவூர் பேரூராட்சிக்குட்பட்ட மைலம்பட்டி பகுதியிலிருந்து அம்மாபாளையம் செல்லும் கிராமப்புற சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் குண்டும் குழியுமான சாலைகளில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே குண்டும் குழியுமான சாலையை பேரூராட்சி நிர்வாகம் சீரமைத்து கொடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story