சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

சீரற்ற சாலை

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்துார் ஒன்றியம், தாசரி குன்னத்துார் செல்லும் சாலையில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு, சேதமான நிலையில் உள்ளது. இந்த பள்ளங்களில், சமீபத்தில் பெய்த மழை நீர் தேங்கி உள்ளது. இந்த சாலையை கொளத்துார், தாசரிகுன்னத்துார் ஆகிய கிராம மக்கள், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு பகுதிகளுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2016ல், பிரதம மந்திரி சாலை திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலை, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, தொடர்ந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் அதிக அளவில் சென்று வருவதால் சேதமடைந்தது.இச்சாலையில் பேருந்து இயக்கப்படாததால், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி செல்லும் போது, அடிக்கடி ஜல்லிக்கற்கள் குத்தி டயர்கள் பஞ்சராகி விடுகின்றன. சாலையில் மராமத்து பணிகள் கூட நடைபெறுவது இல்லை. மேலும், இந்த சாலையில் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்ச உணர்வுடனேயே சென்று வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story