திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

தர்ணா போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், ஏப்பாக்கம் மாரியம்மன் கோயிலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறி கீழ்ப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையில் பொதுமக்கள் திண்டிவனம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவலின் பேரில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கோரிக்கை குறித்து மனு கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று பொதுமக்கள் சார்பில் கார்த்திகேயனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story