குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

தர்ணா போராட்டம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களுடன் வார்டு கவுன்சிலர் விஜய பாண்டியன், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் (ம) அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்கப்படும் என கூறியதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் கலைந்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story