திட்டக்குடி அருகே பொதுமக்கள் தர்ணா போராட்டம்

திட்டக்குடி அருகே பொதுமக்கள் தர்ணா போராட்டம்

பொதுமக்கள் தர்ணா 

தொடர்ச்சியாக நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி ஊராட்சியில் உள்ள 3-வது வார்டு ஆதிதிராவிட பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக நூறுநாள் வேலை வழங்க வலியுறுத்தியும், நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை செய்த 3-வது வார்டு பொதுமக்களுக்கு 4-வாரங்களாக ஊதியம் (சம்பளம்)வழங்காமல் இருப்பதை கண்டித்தும், 3-வது வார்டு பொதுமக்களில் 30 மேற்பட்டவர்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்க படுவதை கண்டித்தும். ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட ஊராட்சி அலுவலகம் சென்றபோது அலுவலகத்தில் யாரும் இல்லாததால் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் தயா. பேரின்பம் தலைமையில் கிராம பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊர் முக்கியஸ்தர்கள் தனராசு, காசிநாதன், முருகப்பன், ராமசாமி, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Tags

Next Story