பொது விநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பொது விநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூரில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம் வரும் 20ம் தேதி நடக்கிறது.

திருவாரூரில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம் வரும் 20ம் தேதி நடக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது விநியோகத்திட்ட சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம் வரும் இருபதாம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் திருவாரூர் வட்டம் அலிவலம் கிராமத்தில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்தும் கோரிக்கை மனுக்களை வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அலுவலர்களிடம் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story